தருமபுரி, பிப்.18:
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம் மற்றும் உள்வட்டம், கே.நடுஅள்ளி கிராமத்தில் இன்று (18.02.2026) மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 102 பயனாளிகளுக்கு ரூ.60.78 லட்சம் (ரூ.60,78,806/-) மதிப்பிலான பல்வேறு துறைகளின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
துறைவாரியான நலத்திட்ட உதவிகள்
வருவாய்த் துறை சார்பில்:
-
20 பயனாளிகளுக்கு ரூ.15.00 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா
-
8 பேருக்கு பட்டா மாறுதல்
-
1 பேருக்கு இருப்பிடச் சான்றிதழ்
-
5 பேருக்கு வருமானச் சான்று
-
3 பேருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் சான்று
-
2 பேருக்கு வாரிசுச் சான்று
-
2 பேருக்கு சிறு விவசாயி சான்று
-
10 பேருக்கு ரூ.1.32 லட்சம் மதிப்பில் புதிய குடும்ப அட்டைகள்
சமூக பாதுகாப்புத் திட்டம்:
-
25 பயனாளிகளுக்கு ரூ.36.00 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை
ஊரக வளர்ச்சி துறை:
-
11 பேருக்கு ரூ.1.00 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி
கூட்டுறவுத்துறை:
-
5 பேருக்கு ரூ.4.92 லட்சம் கடன் உதவி
தோட்டக்கலைத் துறை:
-
1 பயனாளிக்கு ரூ.1.77 லட்சம் மதிப்பிலான உதவி
வேளாண்மைத் துறை:
-
4 பேருக்கு ரூ.44,751/- மதிப்பிலான உதவி
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை:
-
5 பேருக்கு ரூ.31,950/- மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள்
முன்னதாக, வருவாய்த்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மை, தோட்டக்கலை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, மகளிர் திட்டம், சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
மக்கள் தொடர்புத் திட்ட முகாமின் நோக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பின்தங்கிய பகுதிகளில் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் வகையில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
கிராமப்புற மக்களுக்கும் நகர்ப்புற மக்களுக்குச் சமமான சேவைகள், அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசுத் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும். புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மக்கள் தொடர்புத் திட்ட முகாம்களின் உண்மையான வெற்றி, அரசின் நலத்திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைவதே என அவர் தெரிவித்தார்.
இன்றைய தினம் பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்களும் உரிய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தகுதியானவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இம்முகாமில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி இரா.காயத்ரி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.பண்டரிநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சு.சரவணன், தருமபுரி வட்டாட்சியர் திரு.சௌகத்அலி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)