தருமபுரி | பிப்ரவரி 17:
தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினர்.
தருமபுரி அருகே சோகத்தூர் ஏ. ரெட்டியள்ளி பகுதியில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் பங்களிப்புடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, கடந்த 5 ஆம் தேதி திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் புதிய நிலையத்திற்கு மாற்றப்பட்டன.
வியாபாரிகள் பாதிப்பு
திடீர் மாற்றத்தால்:
-
தருமபுரி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது
-
பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் வருவாய் இழப்பை சந்தித்தனர்
-
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்
இதனை கண்டித்து வியாபாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
கடையடைப்பு – பயணிகள் அவதி
பழைய புறநகர் மற்றும் நகரப் பேருந்து நிலையங்களில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால், பேருந்து நிலையத்தைச் சுற்றிய பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டன. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளானனர்.
45 ஆண்டுகளாக வியாபாரம் – முன்னறிவிப்பு இல்லை
ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையம் வியாபாரிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், “கடந்த 45 ஆண்டுகளாக முறையான வாடகை செலுத்தி வியாபாரம் செய்து வருகிறோம். எந்த முன்னறிவிப்பும் இன்றி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பழையபடி பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என வியாபாரிகள் கேட்டுக்கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)