Type Here to Get Search Results !

தருமபுரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; சாகுபடி, உரம், விதை இருப்பு விவரங்கள் வெளியீடு.


தருமபுரி, பிப்.28:
 


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் R. Sathiesh, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.02.2026) நடைபெற்றது. விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அவை அனைத்தும் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.


மழை மற்றும் சாகுபடி நிலவரம்

ஜனவரி மற்றும் பிப்ரவரி 2026 மாதங்களில் மாவட்டத்தில் 2.92 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 2025-2026 ஆண்டிற்கான 2,03,030 ஹெக்டேர் சாகுபடி இலக்கில், 26.02.2026 வரை 1,59,123 ஹெக்டேர் பரப்பில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.


விதை இருப்பு

  • நெல் வகைகள் – 111.356 மெட்ரிக் டன்
  • சிறுதானியங்கள் – 78.864 மெட்ரிக் டன்
  • பயிறு வகைகள் – 45.456 மெட்ரிக் டன்
  • எண்ணெய்வித்துக்கள் – 52.095 மெட்ரிக் டன்


மொத்தமாக 1,088 மெட்ரிக் டன் விதைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இதுவரை 816.040 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


உர மற்றும் உயிர் உர இருப்பு

  • 2025-26 ஆண்டிற்கான உரத் தேவையாக 41,030 மெட்ரிக் டன் கணக்கிடப்பட்டுள்ளது.
  • தற்போது 13,061 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் இருப்பில் உள்ளன.

மேலும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் 37,978 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் (அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உள்ளிட்டவை) இருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


பயிர் காப்பீடு மற்றும் தோட்டக்கலை

திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 14,019 விவசாயிகள் 13,374 ஏக்கர் பரப்பில் காப்பீடு செய்துள்ளனர். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் 78,967.82 ஹெக்டேர் பரப்பளவில் பழங்கள், காய்கறிகள், பூக்கள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.


பயிர் கடன் மற்றும் சர்க்கரை இருப்பு

01.04.2025 முதல் 31.01.2026 வரை 59,292 விவசாயிகளுக்கு ரூ.60,535.07 இலட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. பாலக்கோடு சர்க்கரை ஆலையில் 27,139 குவிண்டாலும், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 47,434 குவிண்டாலும் சர்க்கரை இருப்பு உள்ளது.


துறை வாரியான விளக்க உரை

வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம், பட்டு வளர்ச்சி, கூட்டுறவு உள்ளிட்ட துறைகள் சார்பில் திட்ட விளக்க உரைகள் வழங்கப்பட்டன. விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள், வேளாண் இணை இயக்குநர்கள், கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies