Type Here to Get Search Results !

பெரியார் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் – மாணவர்களுக்கு யோகா பயிலரங்கு நடைபெற்றது.


தருமபுரி, டிச. 05 :

பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) இணைந்து நடத்தி வரும் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, இன்று தருமபுரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிலரங்கு நடைபெற்றது.

இப்பயிலரங்கில் யோகா ஆசிரியர் ஜெயப்பிரியா கலந்து கொண்டு, மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம், தினசரி நடைமுறை, மன–உடல் ஆரோக்கிய நலன்கள் குறித்து விரிவாக பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் சிவலிங்கம் பழனி, தலைமை ஆசிரியர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கருத்துரை வழங்கினர்.


NSS திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் பிரசாத், முனைவர் ரேவதி, முனைவர் வித்யாசாகர் மற்றும் NSS மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies