தருமபுரி, டிசம்பர் 01:
தருமபுரி மாவட்ட நூலகங்களின் செயல்பாடுகள்
தருமபுரி மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் தற்போது மொத்தம் 133 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில்:
-
01 மாவட்ட மைய நூலகம்
-
06 முழுநேர கிளை நூலகங்கள்
-
27 கிளை நூலகங்கள்
-
69 ஊர்ப்புற நூலகங்கள்
-
26 பகுதி நேர நூலகங்கள்
-
01 நடமாடும் நூலகம்
-
03 சிறப்பு நூலகங்கள்
நூலகங்களில் உள்ள பிரிவுகள்
நூலக நண்பர்கள் திட்டம்
தமிழகத்தில் நூலக சேவை இல்லாத கிராம, நகர பகுதிகளில் நூலக நண்பர்கள் மூலம் நூல்கள் வாசகர்களுக்கு சென்றடையும் வகையில் தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதன் மூலம் 32 நூலகங்களில் சுழற்சி முறையில் நூல்கள் வழங்கப்பட்டு வருகிறது.
புத்தகத் திருவிழா
-
வருகை: 14,432 பேர்
-
நூல் விற்பனை: 27,238 புத்தகங்கள்
-
விற்பனை மதிப்பு: ₹4,80,062
இளைஞர் இலக்கியத் திருவிழாக்கள்
தமிழ்நாடு முழுவதும் 5 இலக்கியத் திருவிழாக்கள் (சென்னை, வைகை, காவேரி, பொருநை, சிறுவாணி) நடைபெற்று வருகிறது. சிறுவாணி திருவிழா தருமபுரி உட்பட 7 மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது.
சிறைச்சாலைகளுக்கு நூல்கள் வழங்கல்
தருமபுரி மாவட்ட சிறைச்சாலைக்கு மாதந்தோறும் 100 நூல்கள், அரூர் கிளைச்சிறைக்கு 50 நூல்கள் வழங்கப்படுகிறது.
சொந்த நூலகங்களுக்கு விருது
2024–2025 நிதியாண்டில், வீட்டில் நூலகம் அமைத்து பயன்படுத்தும் தீவிர வாசகர்கள் ₹3,000 கேடயம் + சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்.
100 புதிய நூலகங்கள் அமைத்தல்
-
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
-
அரூர் அரசு மருத்துவமனை
-
பென்னாகரம் அரசு மருத்துவமனைஎன மூன்று இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இணைய (Wi-Fi) வசதி
கிராமப்புற நூலகங்களில் BSNL மூலம் 60Mbps இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு உதவித்திட்டம் – 821 நூலகங்கள்
2023–2024 நிதியாண்டில் ஒன்றிய அரசு ₹213.46 கோடி மானியம் வழங்கி, புதிய கட்டிடங்கள், கணினிகள், தளவாடங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
விழாவில் கலந்து கொண்டோர்
நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் திருமதி கோகிலவாணி, வாசகர் வட்டத் தலைவர் இரா. செந்தில், முதல் நிலை நூலகர் இரா. மாதேஸ்வரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)