தருமபுரி, நவம்பர் 13:
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNHB) மூலம் தருமபுரி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வீடு பெற விரும்பும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப. தெரிவித்தார்.
மாவட்டத்திலுள்ள திட்டப்பகுதிகள்:
-
பென்னாகரம் பேரூராட்சி – பொடூர் திட்டப்பகுதி
-
பொமல்லாபுரம் பேரூராட்சி அருகில் – கொண்டஹரஹள்ளி திட்டப்பகுதி
-
அரூர் அருகில் – நம்பிப்பட்டி & பிச்சாங்கொட்டாய் திட்டப்பகுதிகள்
-
காரிமங்கலம் அருகில் – முக்குளம் திட்டப்பகுதி
-
நல்லம்பள்ளி வட்டம் – அதியமான் கோட்டை திட்டப்பகுதி
மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் சொந்த வீட்டில்லாத குடும்பங்கள் வீடு பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
-
குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்
-
குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) நகல்
-
வாக்காளர் அடையாள அட்டை நகல்
-
வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்
-
குடும்பத்தாரின் புகைப்படம்
தகுதி நிபந்தனைகள்
-
ஆண்டு வருமானம் ₹3 இலட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
-
வீடு பெறும் முன் அரசு நிர்ணயித்த பயனாளி பங்கை முன்பணம் செலுத்த வேண்டும்.
-
“எனக்கு சொந்த வீடும் நிலமும் இல்லை; அரசு வழங்கும் வீடுகளை விற்கவோ/குத்தகைக்கு விடவோ மாட்டேன்” என்ற உறுதிமொழி சமர்ப்பிக்க வேண்டும்.
📅 05.12.2025 அன்று முன் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட திட்டப்பகுதி அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். மாவட்டத்திலுள்ள வீடில்லாத குடும்பங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
.gif)

.jpg)
.jpg)