தருமபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அன்னையர் ஆலயம் முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 75 வயது கணேசன் என்ற முதியவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்தார். குடும்ப உறவுகள் யாரும் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த இவர், வயது மூப்பு காரணமாக இயற்கை மரணம் அடைந்தார். அவரது உடலை உறவினராகக் கருதி, மை தருமபுரி அமைப்பினர் முன்வந்து இறுதி அஞ்சலி செலுத்தி, மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்.
மை தருமபுரி அமரர் சேவை அமைப்பு, இதற்கு முன் ஆதரவற்றும், ஏழ்மையில் இறந்தவர்களாகிய 173 பேரின் உடல்களை மரியாதையுடன் நல்லடக்கம் செய்துள்ளது. சமூக மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்தச் செயலுக்காக பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர் சையத் ஜாபர், மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுநர் செந்தில் ஆகியோர் இணைந்து கணேசன் தாத்தாவின் உடலை நல்லடக்கம் செய்தனர்.
அமைப்பின் உறுப்பினர்கள் கூறுகையில்,
“உறவில்லாதவர்களுக்கும் மரியாதை அளித்து மனிதநேயத்தின் பிணைப்பை தொடர்வதே எங்கள் நோக்கம்,”என்று தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)