ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட தயாரிப்புகளுக்குப் பதிலாக, மஞ்சப்பை போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரிய பொருட்களைப் பயன்படுத்துவதையும், தங்கள் வளாகத்தை முழுமையாக பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றுவதையும் உறுதியாக செயல்படுத்தும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
- முதல் பரிசு: ரூ. 10 லட்சம்
- இரண்டாம் பரிசு: ரூ. 5 லட்சம்
- மூன்றாம் பரிசு: ரூ. 3 லட்சம்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் – TNPCB, தங்கள் வளாகங்களுக்குள் மற்றும் வெளியே பிளாஸ்டிக் தடையை நடைமுறைப்படுத்த ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொண்ட முன்னோடி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கின்றது.
- இணைப்புகள்,
- அமைப்புத் தலைவர் அல்லது தனிநபரின் கையொப்பம்,
- மென் நகல் (CD / Pen drive),
- மேலும் இரண்டு கடின நகல்கள் சேர்த்துத்தான் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப சமர்ப்பிக்கும் கடைசி தேதி: 15.01.2026
இந்த விவரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)