பாலக்கோடு, அக். 27 -
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தனியார் மண்டபத்தில் பாமக (அன்புமணி அணி) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. தொகுதி பொறுப்பாளர் கே.இ. கிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில இளைஞர் அணி செயலாளர் முருகசாமி, மாநில துணைத் தலைவர் பாடி செல்வம், மாநிலப் பொறுப்பாளர்கள் வேளவள்ளி சேகர், அன்பழகன், மாநில மகளிரணி பொறுப்பாளர் சரவணக்குமாரி, பெரியம்மா நாகு, பானு, பாலகிருஷ்ணன், வாசு நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வரும் நவம்பர் 4ஆம் தேதி தருமபுரியில் நடைபெறவுள்ள “தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்” மற்றும் பொதுக்குழுவில் பங்கேற்க வரவுள்ள பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் துரை, சுகர்மில் துரை, சரவணன், முருகன், சிலம்பரசன், குமார், சஞ்சீவன், கண்ணன், சின்னசாமி, பழனி, ஒன்றிய தலைவர்கள் ஏழுகுண்டன், மாதையன், ராமசந்திரன், மகாதேவன், கோவிந்தசாமி, நகர தலைவர் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

.jpg)