Type Here to Get Search Results !

பாலக்கோடு கோட்டைத் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் — பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி அடிக்கல் நாட்டினார்.


பாலக்கோடு, அக். 10 -

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 5வது வார்டு கோட்டைத் தெருவில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சரவணண், மோகன், ஜெயந்திமோகன், ரூஹித், சாதிக்பாஷா, வகாப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கத்துடன், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.


அதனை தொடர்ந்து 5வது வார்டு கோட்டைத் தெருவில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடக்கவிழாவை நடத்தினார்.


இந்நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் அமானுல்லா, ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் குமரன், கிளை செயலாளர்கள் ராஜீ, கணேசன், வடிவேல், ராமமூர்த்தி, மோகன், காமராஜர், ஐயப்பன், அன்வர் பாஷா, செளகர், சாஹிப்அஸ்ரக், நூருல்லா, சமியுல்லா, அஸ்லாம், அன்சர், இலியாஸ், மஹயூப், சபியுல்லா, அப்சல், பாபாஜான், குஷ்காமியான், நிசார், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி ஸ்ரீதர், தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies