பாலக்கோடு, அக். 08 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு மந்தைவெளியில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும், சங்கொலி கருவி நிறுவுவதற்குமான அடிக்கல் நாட்டு விழா பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திமுக நகர அவைத்தலைவர் அமானுல்லா, ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, மற்றும் மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களின் நலனையும், சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு, பேரூராட்சி பொது நிதியில் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து இந்நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சங்கொலி கருவி அமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பணிகள் தொடக்கமாக பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி அவர்கள் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் விமலன், குருமணி, லட்சுமி ராஜசேகர், தீபா சரவணன், மோகன், சரவணன், ஜெயந்தி மோகன், ரூஹித், சாதிக் பாஷா, வகாப் ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் கிளை செயலாளர்கள் ராஜீ, கணேசன், வடிவேல், மாரியப்பன், சரவணன், ராமூர்த்தி, ஆறுமுகம், மியான்குஷ்கா, நிர்வாகிகள் ஆனந்தன், ராமலிங்கம், ராஜேந்திரன், செல்வகுமாரன், பூங்காவனம், முத்து, அம்ஜீத், கோவிந்தசாமி, முருகேசன், அன்பழகன், சங்கர், சிவா, அண்ணாமலை, மனோகரன், தீபா, தேவன், படவட்டை, வேட்ராயன், நிசார், மற்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஸ்ரீதர், தமிழரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

