பாலக்கோடு, அக். 27 -
பாலக்கோடு அடுத்த செங்கோடப்பட்டி கிராமத்தை சேர்ந்த வீரம்மாள் (55), கடந்த 26ம் தேதி மாரண்டஅள்ளி அருகே உள்ள முஸ்டிகிரிஅள்ளி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு, இரவு சுமார் 7 மணியளவில் ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, 16 வயதுடைய சிறுவன் ஒருவர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து பின்தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. பாதையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தைச் சேர்ந்தபோது, அந்த சிறுவன் வீரம்மாளின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறிக்க முயற்சி செய்து, “கொடுக்கவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன்” என மிரட்டியுள்ளார்.
வீரம்மாள் எதிர்த்து கத்தியதால், அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து உதவியுள்ளனர். இதனால் சிறுவன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டான். இதுகுறித்து வீரம்மாள் அளித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றவாளி பாலக்கோடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரியவந்தது.
அவனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவனை சேலம் சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். மூதாட்டியின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறிக்க முயன்ற சிறுவனின் செயல், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.gif)

.jpg)