Type Here to Get Search Results !

ஏழ்மையில் இறந்த பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்.


தருமபுரி, அக்டோபர் 23:


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வள்ளி (38) என்ற பெண், ஏழ்மையில் வாழ்ந்த நிலையில் உயிரிழந்தார். இறந்த அவரது உடலை தருமபுரி அரசு மருத்துவமனைவில் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

ஏழ்மையில் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்ய மை தருமபுரி அமைப்பினரை தொடர்பு கொண்டனர். நிகழ்ச்சியில் காரிமங்கலம் காவல் நிலைய காவலர் கிருஷ்ணமூர்த்தி, மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், மற்றும் அமைப்பாளர்கள் சண்முகம், சையத் ஜாபர் ஆகியோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தி உடலை நல்லடக்கம் செய்தனர்.


மை தருமபுரி அமைப்பின் அமரர் சேவை மூலம் இதுவரை 170 புனித உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மரணிப்பவர்களுக்கும் மனிதநேயம் பகிர்வது முக்கியத்துவம் பெறுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies