தருமபுரி, அக். 26 -
தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிபட்டி ரயில் நிலையம் அருகே, அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க இரண்டு முதியவர்கள் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மொரப்பூர் ரயில்வே காவல் நிலைய போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தியபோதிலும், இறந்தவர்களைப் பற்றிய எந்த ஒரு அடையாள தகவலும் கிடைக்கவில்லை.
பின்னர், தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர் யாரும் வராத நிலையில், மனிதநேய அடிப்படையில் மை தருமபுரி அமைப்பினர் முன்வந்து உடல்களை நல்லடக்கம் செய்தனர். இந்நிகழ்வில், அமைப்பின் செயலாளர் முனைவர் தமிழ்செல்வன், கணேஷ் குமார்–ராஜா பார்வதி தம்பதியினர், சண்முகம், ராமமூர்த்தி, மணிவேந்தன், ஆமா, அருள்குமார், மீனா உள்ளிட்டோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மை தருமபுரி அமைப்பின் “அமரர் சேவை” முயற்சியின் மூலம் இதுவரை 172 ஆதரவற்ற மற்றும் ஏழ்மையில் உயிரிழந்தோரின் உடல்களுக்கு இறுதி மரியாதையை செலுத்தி நல்லடக்கம் செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

.jpg)