அரூர், அக். 11 -
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே வேப்பம்பட்டி பொன்னேரி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் மாம்பாடி பெருமாள் கோவில் அருகே உள்ள இ-சேவை மைய கட்டிடம் மற்றும் பொன்னேரி ஊராட்சி பல்நோக்கு கட்டிட வளாகத்தில், ஊராட்சி செயலாளர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), வாக்காளர் குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினர், மகளிர் குழு செயலாளர்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பினர்கள், ஆண்கள் சுய உதவி குழுவினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள், பனிதள பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முக்கிய தீர்மானங்கள்:
1️⃣ குப்பை இல்லா ஊராட்சி உருவாக்கல்
2️⃣ தண்ணீரை வீணாக்காமல் பாதுகாப்பாக பயன்படுத்தல்
3️⃣ மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பையை பிரித்தெடுத்து சரியான முறையில் அகற்றல்
இத்தீர்மானங்களை அனைவரும் ஒருமனதாக உறுதிமொழி எடுத்து ஏற்றுக்கொண்டனர்.