தருமபுரி, அக். 07 -
அக்டோபர் 2, தருமபுரி உதயமாகி 60 ஆண்டுகள் நிறைவு கொண்ட தருமபுரி தினத்தை முன்னிட்டு, தருமபுரியில் சமூக சேவை செய்துவரும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தினர்.
இந்த முகாமில் ஒரு அமைப்புக்கு ஒருவர் என்ற கொள்கையின் அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்படுத்தினர். முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் தலைசீமியா குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், அறுவை சிகிச்சை அவசர தேவைகள் போன்ற நோயாளிகளுக்கு குருதி வங்கி மருத்துவரின் மூலம் வழங்கப்பட்டது.
முகாமை எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், மை தருமபுரி NGO நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், சையத் ஜாபர், தன்னார்வலர் குணசீலன், ஆதி பவுண்டேஷன் ஆதிமூலம், பசியில்லா தருமபுரி வினோத் குமார், கிராம விழிகள் அறக்கட்டளை செல்லதுரை, அப்துல் கலாம் இளைஞர் நற்பணி இயக்கம் பிரபு, உதவும் உறவுகள் அறக்கட்டளை இராமன் இந்த அமைப்புகள் ஒருங்கிணைந்து ரத்ததான முகாமை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.

