Type Here to Get Search Results !

தருமபுரியில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் காந்தி ஜெயந்தி விழா – மதச்சார்பின்மை, சமத்துவம் வலியுறுத்தல்.


தருமபுரி, அக். 02:

தருமபுரி மாவட்ட ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தியின் 157வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தருமபுரி நகரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கட்சியினர், "மதச்சார்பின்மையை பாதுகாப்போம்! மனிதநேயத்தை பேணி காப்போம்! தீண்டாமையை ஒழிப்போம்! வகுப்பு வாதத்தை முறியடிப்போம்!" என முழக்கமிட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் ஜெ. பிரதாபன் தலைமையில்அமைய, அவர் தனது உரையில் காந்தியடிகளின் கொள்கைகளை நினைவுகூர்ந்து, சமூக சமத்துவத்தை நிலைநிறுத்தும் பணிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.


தொழிற்சங்கத் தலைவர் எஸ். சுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜி. மாதையன், சி. பாலன், பொருளாளர் அலமேலு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி. இரவி, ஜி. பச்சாகவுண்டர், ஜி. ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர். மேலும், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். பெருமாள், கே. லட்சுமணன், ஜி. சம்பத், ஆர். ரங்கநாதன், தி. தங்கராஜ், பி. பெருமாள், முருகன், ஆர். மல்லையன் ஆகியோரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies