அரூர், அக்டோபர் 02:
தருமபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட (NSS) சிறப்பு முகாம் கடந்த 26.09.2025 முதல் 02.10.2025 வரை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அரூர் தீயணைப்பு நிலைய ஆய்வாளர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி என்பதையும், பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக செயல்படுவது என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும், நாட்டு நலப்பணி திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்திற்கான அதன் பங்களிப்பு பற்றியும் விளக்கினார்.
இவ்விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் இரா. ஆறுமுகம் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் இரா. கதிரேசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இணை திட்ட அலுவலர் து. சக்திவேல் அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார். சிறப்புரை தீயணைப்பு நிலைய ஆய்வாளர் வழங்க, பகுதி சேகர் ஆசிரியர் நன்றியுரையாற்றினார்.