அரூர், அக்டோபர் 16 -
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் சார்பாக 11ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி அரூர் நூலகத்தில் தொடக்கவிழா நடைபெற்றது. ஆசிரியர் கே.சின்னக்கண்ணன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் எஸ். இராசேந்திரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடக்கத்தை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கட்டுமான சங்க தலைவர் ஆர்.நடராஜன், நூலக வாசகர் வட்ட தலைவர் இ.கே.முருகன், நூலகர்கள் தும்பாராவ் தீர்த்தகிரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அல்லி முத்து, செங்கொடி, கமலா மூர்த்தி, சிற்றரசு மற்றும் என்.சி.பி.எச். மேலாளர் சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.