பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் முகாம்களில் நகரப் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன.
முகாம் நடைபெறும் இடங்கள்:
வார்டு வாரியாக நடைபெறும் இந்த முகாம்கள் குறித்து அலுவலர்கள் வழியாக மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர். இந்த முகாம்களின் மூலம் பொதுமக்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு, பல்வேறு அரசுத் திட்ட நன்மைகள் மக்களிடம் நேரடியாக சென்றடையும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.