தருமபுரி, செப். 7 | ஆவணி 22 -
தருமபுரி மாவட்டம் பாப்பிசெட்டிப்பட்டி பகுதியில் SVPS Boys நண்பர்கள் மற்றும் கடத்தூர் சார்பில் 45-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. போட்டிக்கான பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் முனைவர் பி. பழனியப்பன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், திமுகவின் T. நெப்போலியன், A. நாசர், தீ. கோடீஸ்வரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சே. சதீஸ், ராணி அம்பேத்கர், குப்புசாமி, கருணாநிதி ஆகியோர் பங்கேற்றனர். போட்டியில் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
.gif)

