தருமபுரி, செப்டம்பர் 16, 2025 (ஆவணி 31) -
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 19.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நேரடியாக தேர்வு செய்ய உள்ளன. பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.
இம்முகாம் முற்றிலும் இலவசமாக நடைபெறுகிறது. மேலும், இந்த முகாம் மூலம் தனியார் துறையில் வேலை பெற்றாலும், அவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆகையால், தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் 19.09.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.