மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ர. சதீஷ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெறும் இம்முகாம்களில் பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக முன்வைக்கலாம். முன்வைக்கப்பட்ட குறைகள் தொடர்பாக உரிய துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதிகபட்சம் 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முகாம் நடைபெறும் இடங்கள்:
-
தருமபுரி மாநகராட்சி (வார்டுகள் 19, 20, 21, 22): BBC திருமண மண்டபம், சாலை விநாயகர் தெரு, தருமபுரி.
-
தருமபுரி – நள்ளாசேனஹள்ளி, நூலஹள்ளி: புதிய பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், மண்டு வளாகம்.
-
பெண்ணாகரம் – வட்டுவனஹள்ளி: VPRC கட்டிடம், ஜெலமரம்பட்டி.
-
நல்லம்பள்ளி (தின்னஹள்ளி, மாதேமங்கலம்): PUMS பள்ளி வளாகம், தின்னஹள்ளி.
-
எரியூர் – சுஞ்சல்நாதம்: ராமசாமி பொன்னம்மாள் திருமண மண்டபம்.
-
பாலக்கோடு – கெண்டேனள்ளி: சமுதாய கூடம், பாலக்கோடு.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாகக் கூறி, அரசின் உடனடி உதவியைப் பெறும் நல்ல வாய்ப்பாக இந்த முகாம்கள் அமையும். எனவே அதிக அளவில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.