தருமபுரி, செப்டம்பர் 29 | புரட்டாசி 13:
தமிழக ஒக்கிலிக கவுடர் மகாஜன சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தருமபுரி செங்குந்தர் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் வெள்ளிங்கிரி தலைமையில் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பி. கே. தாஸ் வரவேற்றார். ஆண்டறிக்கையை ஜனகரன் வாசித்தார்; வரவு, செலவு அறிக்கையை பிரகாஷ் வாசித்தார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சென்னை கல்வி அறக்கட்டளைக் கட்டிடம் சீரமைத்தல், மாநில இளைஞரணி மற்றும் மகளிர் அணி தொடங்குதல், கோவை மற்றும் ஈரோடு மாவட்ட சங்கங்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக நிர்வாக அறங்காவலர்கள் கிருஷ்ணசாமி, பழனிசாமி, ரகுபதி, முருகேசன், குப்புராஜ், சந்தோஷ்குமார், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில துணைச் செயலாளர் ஆர். ஜெகநாதன், விஸ்வநாதன், மூர்த்தி, கார்த்தி, சோமசுந்தரம், விமல்ராஜ், தண்டபாணி ஆகியோரும் பங்கேற்றனர்.
மாநில பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் மயில்சாமி நன்றியுரை ஆற்றினார். விழா ஏற்பாடுகளை தருமபுரி நகர டி.ஏ. செளந்தரராஜன் மற்றும் ரமேஷ்பாபு செய்திருந்தனர்.