அரூர் அருகே உள்ள பாப்பிசெட்டிபட்டியில், இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் மறைந்த பி.வி.கரியமால் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நெப்போலியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.ராஜேந்திரன், முன்னாள் விவசாய அணி தலைவர் செல்வராசு, திமுக மேற்கு மாவட்ட பிரதிநிதி ஆர்.கருணாநிதி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ராணிஅம்பேத்கர், மேற்கு மாவட்ட ஐடி ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், இளைஞரணி துணை அமைப்பாளர் தீ.கோட்டிஸ்வரன், நிர்வாகிகள் தீத்தான், மதியழகன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.