Type Here to Get Search Results !

மோட்டார் சைக்கிள் மீது சொகுசு கார் மோதியதில் வாலிபர் பலத்த காயம்.


பாலக்கோடு, செப்டம்பர் 26 | புரட்டாசி 10 :

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பூமரத்துபள்ளம் கிராமம் சேர்ந்த வசந்தகுமார் (22), கெலமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் வேலைக்கு செல்லும் போது, தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோட்டிலிருந்து கெலமங்கலம் நோக்கி செல்லும் போது, பாலக்கோடு பைபாஸ் சாலையில் பின்னால் வந்த சொகுசு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வசந்தகுமார் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.


சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் அவ்வழியாக அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies