Type Here to Get Search Results !

தருமபுரி 7ஆம் ஆண்டு "தகடூர் புத்தகத் திருவிழா 2025" கோலாகலமாக தொடங்கியது.


தருமபுரி, செப்டம்பர் 26 | புரட்டாசி 10 :

தருமபுரி மாவட்டம், மதுராபாய் சுந்தர ராஜராவ் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா 2025 இன்று தொடங்கியது. முன்னாள் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் ஓய்வு திரு. வெ.இறையன்பு, இ.ஆப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆப., ஆகியோர் தொடக்க விழாவில் கலந்துகொண்டு புத்தக அரங்குகளை பார்வையிட்டனர்.


இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், தருமபுரி மாவட்டத்தில் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரித்து, அறிவாற்றலை மேம்படுத்துவதாகும். விழாவில் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், நூலக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு நூல்களையும், கல்வி, வரலாறு, இலக்கியம், அறிவியல் மற்றும் சிறுவர் நூல்களையும் பரிசீலித்து வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெற்றனர்.


இப்புத்தகத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தலைப்புகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு நிகழ்வாக, காடுகளைப் பற்றி மட்டுமே பேசும் “காடுடம்” புத்தகம் முன்னாள் தலைமைச் செயலாளர் திரு. வெ.இறையன்பு வழங்கினர். மாநில, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை தொடர்புடைய அலுவலர்கள் விழாவில் கலந்துகொண்டனர். திருவிழா அக்டோபர் 5 வரை நடைபெறும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies