தருமபுரி, செப் 08, 2025 (ஆவணி 23):
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, இன்று அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேடகட்டமடுவு ஊராட்சி டி. ஆண்டியூரில் அதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம், தருமபுரி மாவட்டச் செயலாளர் கே. பி. அன்பழகன் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலோடு, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார் எம்.எல்.ஏ. தலைமையிலும், ஒன்றியச் செயலாளர் ஆர். ஆர். பசுபதி மற்றும் நகரச் செயலாளர் ஏ.ஆர்.எஸ்.எஸ். பாபு (அறிவழகன்) முன்னிலையிலும் நடைபெற்றது.
அரூர் சட்டமன்றத் தொகுதி, அதிமுகவுக்கு பாரம்பரியமாக வலுவான ஆதரவு மண்டலமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிச்சாமியின் தனிப்பட்ட செல்வாக்கு தருமபுரி மாவட்டத்திலும் அரூரிலும் அதிகம் உள்ளதாக அதிமுக நிர்வாகிகள் நம்புகின்றனர். இதனை பயன்படுத்தி, எழுச்சி பயணம் மூலம் அதிமுக தரப்பில் வாக்காளர் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் நோக்கம் காணப்படுகிறது.
இக்கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வழங்கப்படவுள்ள வரவேற்பு, பிரச்சார ஏற்பாடுகள், மற்றும் கூட்டணி கட்சிகளின் பங்குபற்றி பேசப்பட்டது. மேலும், உள்ளூர் நிலைமைகளை கணக்கில் கொண்டு, மக்கள் பங்கேற்பை அதிகரிக்க கிராமம் தோறும் பிரச்சார இயக்கங்களை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
.gif)

.jpg)