தருமபுரி, செப். 16 (ஆவணி 31) -
தருமபுரி மாவட்டம், தருமபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட நூல அள்ளி மற்றும் நல்ல சேன அள்ளி ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மண்டுவில் நடைபெற்றது.
இந்த முகாமில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, பட்டா சிட்டா பெயர் மாற்றம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை போன்ற சேவைகளை வேண்டி துறை சார்ந்த அலுவலர்களிடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். மேலும், மருத்துவ முகாமில் பிபி, சக்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் பொதுமக்களுக்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் இம்முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று ஆய்வு செய்தார். தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, ஒன்றிய செயலாளர் மாதையன், சக்திவேல், ஊராட்சி மன்ற செயலாளர், பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.