Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டியில் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் – ஆகஸ்ட் 7 அன்று நடைபெறுகிறது.


பாப்பரப்பட்டி, ஆக 03 | ஆடி 17 - 


சர்வதேச கூட்டுறவு ஆண்டு – 2025 மற்றும் 11வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த உள்ளது. இந்த முகாம் 07.08.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை, எஸ்.ஏ.16 பாப்பாரப்பட்டி அறிஞர் அண்ணா தொடக்க தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெறும்.


மருத்துவ முகாமில் இருதய நோய், கண், காது-மூக்கு-தொண்டை மருத்துவம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் பரிசோதனை, பொது சுகாதாரம், மகளிர் சுகாதாரம் மற்றும் வருமுன் காப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் நெசவாளர்கள், நெசவு சார்ந்த உபதொழில் புரிபவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். மருத்துவ முகாமில் கலந்து கொள்வோருக்கு அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884