Type Here to Get Search Results !

அளேபுரம் கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.


பென்னாகரம், ஜூலை 29 | ஆடி 13 -


தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் மக்கள் குறைகளை நேரடியாகக் கேட்டறிய சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில், பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட அளேபுரம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இன்று (ஜூலை 30) “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது.

மக்கள் தங்களின் வாழ்வாதாரச் சிக்கல்களைத் தீர்க்க, இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, சமூக நலன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட 15 துறைகள் மற்றும் 46 வகையான சேவைகள் வழங்கப்பட்டன.


இந்த முகாமில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி நேரில் பங்கேற்று முகாமின் செயல்பாடுகளை பார்வையிட்டார். மேலும், முகாமில் தர்மபுரி மாவட்ட உதவி ஆணையர் (ஆயம்) S. நர்மதா, பென்னாகரம் வட்டார ஊராட்சி அலுவலர் சக்திவேல், கிராம ஊராட்சி அலுவலர் லோகநாதன், வட்டாட்சியர் சண்முகசுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன், திமுக ஒன்றியச் செயலாளர் மடம் முருகேசன், ஏரியூர் ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884