Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி அருகே திருமணமாகாத மனவலியில் வாலிபர் உயிரிழப்பு.


மாரண்டஅள்ளி, ஜூலை 29 ஆடி 13 -


மாரண்டஅள்ளி அருகே உள்ள சாஸ்திரமுட்லு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெற்றிவேல் (வயது 40) நீண்ட காலமாக திருமணமாகாத மனச்சோர்வில் இருந்ததாக கூறப்படுகிறது. மன அழுத்தத்திலும், மது பழக்கத்திலும் சிக்கியிருந்த அவர், தனது வாழ்வுக்கு எதிராகத் திடீர் முடிவெடுத்தது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வழக்கம்போல இரவு தனது தோட்டத்திற்கு காவலுக்குச் சென்ற அவர், திடீரென வாந்தியுடன் மயங்கி விழுந்துள்ளார். இதனை அருகில் இருந்த தோட்ட உரிமையாளர் சுப்பிரமணி கவனித்து, உடனடியாக உறவினர்களுக்கு தகவல் வழங்கினார். உடனே சம்பவ இடத்துக்குச் சென்ற உறவினர்கள், வெற்றிவேலை மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். விசாரணையில், மதுவில் விஷம் கலந்து பருகியிருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884