பாலக்கோடு, ஜூலை 22 | ஆடி 06 -
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரில் பெற்றார். முகாமில், மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப உறுப்பினர் சேர்க்கை, ஆதார் திருத்தம், இலவச வீடு மற்றும் வீட்டுமனை உள்ளிட்ட தேவைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
முகாமில் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன், வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் சரத்குமார், ஊராட்சி செயலாளர் சரவணன், திமுக நிர்வாகிகள் ஜே.எம்.சக்தி, கனேசன், சலீம், யுவராஜ், விஜய் மற்றும் அனைத்து துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு மக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். மக்கள் நலத்தை முன்னோக்கி கொண்டு செயல்படும் தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், அரசுத் திட்டங்களை நேரடியாக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பயனுள்ள முயற்சியாக அமைந்துள்ளது.
- செய்தியாளர் வேலு.