Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி மாவட்டம் சோமனஅள்ளியில் மக்கள் தொடர்பு முகாம் – ரூ.28.74 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தருமபுரி, ஜூலை 9 (ஆனி 25)

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் உள் வட்டம், சோமனஅள்ளி கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் ரூ.28.74 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மொத்தம் 77 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. நிகழ்வில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.மணி அவர்கள் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


முக்கியமாக வழங்கப்பட்ட உதவிகள்:

  • வருவாய்துறை சார்பில் 15 பேருக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா

  • இயற்கை மரணம், ஈமசடங்கு நிதி உதவிக்கு 4 பேருக்கு ரூ.87,500

  • குடும்ப அட்டைகள் – 40 பேருக்கு

  • வேளாண்மைத் துறை சார்பில் 4 பேருக்கு ரூ.36,000 மதிப்பில் துவரை செயல் விளக்க உதவிகள்

  • தோட்டக்கலைத் துறை சார்பில் 3 பேருக்கு ரூ.4.49 லட்சம் மதிப்பில் மா, தக்காளி பரப்பு திட்டம் மற்றும் சொட்டு நீர் பாசன கருவிகள்

  • மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 பேருக்கு ரூ.6.60 லட்சம் மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள்

  • வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 2 பேருக்கு ரூ.2.32 லட்சம் மதிப்பில் பவர் டில்லர் கருவிகள்


முகாமை தொடங்குவதற்கு முன், மாவட்ட ஆட்சித்தலைவர் பல்வேறு அரசு துறைகளின் கண்காட்சிகளை பார்வையிட்டார். இதில் வருவாய்துறை, மீன்வளத்துறை, வேளாண்மை, தோட்டக்கலை, மகளிர் திட்டம், மருத்துவம், சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகள் கலந்து கொண்டன.


மாவட்ட ஆட்சியர் உரை:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கிய "மக்கள் தொடர்பு திட்டம்" கிராமப்புற மக்களுக்கு அரசின் நலத்திட்டங்களை நேரடியாக எடுத்துச் செல்லும் முயற்சியாக செயல்படுகிறது. பின்தங்கிய பகுதிகளைத் தேர்வு செய்து, அரசின் சேவைகள் மற்றும் திட்டங்களை எடுத்துரைத்து மனுக்களை பெற்று, தகுதியானவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.


மேலும் அவர் கூறியதாவது:
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், ஜூலை 15 முதல் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று அரசு சேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விண்ணப்பங்களை வழங்கும் பணிகள் நடைபெறும். மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும்."


இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன், வருவாய் கோட்டாட்சியர் இரா. காயத்ரி, மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம், ஆதிதிராவிடர் நல அலுவலர் தேன்மொழி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் உரிய கள ஆய்வுகளுடன் பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி அளித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884