Type Here to Get Search Results !

தருமபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 486 மனுக்கள் பெறப்பட்டது.


தருமபுரி, ஜூலை 21 | ஆடி 05 –

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று (21.07.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 486 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள், அரசு நலத்திட்ட உதவிகள், உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள், அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப அனைத்து மனுக்களும் உரிய துறை அலுவலர்களிடம் அனுப்பி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.


மாநில முதலமைச்சர் அறிவுறுத்தியபடி, பொதுமக்களின் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து விரைந்து தீர்வு காண வேண்டிய பொறுப்பை அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.


486 மனுக்களில்,

  • சாலை வசதி, குடிநீர், பேருந்து சேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்,

  • பட்டா, சிட்டா பெயர் மாற்றம், வாரிசுச் சான்றிதழ்,

  • புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா,

  • முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் ஆகியவைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளனர்.


மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ் அவர்கள், இந்த மனுக்கள் அனைத்தும் விரைந்து நடவடிக்கைக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், துறை அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர்.கவிதா, கலால் உதவி ஆணையர் திருமதி நர்மதா, தனித்துணை ஆட்சியர் திரு சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு செம்மலை, ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி தேன்மொழி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884