Type Here to Get Search Results !

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய அமலா நர்சரி பள்ளியின் இரட்டை சகோதரிகள்.


தருமபுரி, ஜூலை 20 | ஆடி 04 -

மை தருமபுரி அமைப்பின் சார்பாக, தருமபுரி மாவட்டம் மற்றும் தமிழகமெங்கும் மனிதநேயத்துடன் பல்வேறு சேவைகள் அடித்தட்டு மக்களுக்கு எட்டும் வகையில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, புற்றுநோய் பாதித்த குழந்தைகள் மற்றும் மக்களுக்கு தட்டணு தானம், இரத்த தானம், போன்ற அவசர தேவைச் சேவைகளை மையமாக வைத்து செயல்பட்டு வருகின்றனர்.


புற்றுநோய் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு ஏற்படும் முடி உதிர்வு மனஉளைச்சலை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, தலைமுடி செய்வதற்கான 'கூந்தல் தானம்' விழிப்புணர்வு நிகழ்வுகள் தருமபுரி மாவட்டம் முழுவதும் இந்த அமைப்பின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், தருமபுரி அரசு மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள அமலா நர்சரி பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வரும் இரட்டைச் சகோதரிகள் ரித்திகா மற்றும் ரூபிகா, புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக தங்களது கூந்தலை தானமாக வழங்கிய சிறப்பான செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.


இவர்கள் தருமபுரி வேடியப்பன் திட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களின் தந்தை திரு. பிரசாத் அவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்திய அமலா நர்சரி பிரைமரி பள்ளி குழுமத்திற்கும், மை தருமபுரி அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன. இந்நிகழ்வில், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஷ்குமார் ராஜா, அமைப்பின் செயலாளர் தமிழ்செல்வன், மற்றும் தன்னார்வலர் அம்பிகா ஆகியோர் உடனிருந்தனர். சிறுவயதிலேயே சமூகத்தின் முக்கிய தேவையை உணர்ந்து செயலில் ஈடுபட்ட ரித்திகா மற்றும் ரூபிகா அவர்களின் செயலால் பலர் ஊக்கமடைந்து இந்த செயல்பாட்டில் பங்கேற்க முன்வருவார்கள் என அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies