Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – ஜூலை 31ல் நடைபெறுகிறது.


தருமபுரி, ஜூலை 25 | ஆடி 08 -

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சந்திக்கும் வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளை நேரில் கேட்டறிந்து தீர்வு காணும் வகையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31.07.2025 வியாழக்கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது வேளாண்மை குறைகள், தேவைகள் மற்றும் ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகத்தினரிடம் தெரிவித்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த கூட்டம், அரசு மற்றும் விவசாயிகளுக்கு இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தி, நிலையான தீர்வுகளைத் தேடுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமைவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884