Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க காலஅவகாசம் 31 ஜூலை வரை நீட்டிப்பு.


தருமபுரி, ஜூலை 22 | ஆடி 06 -

தருமபுரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மன்ற உறுப்பினராக மாற்றுத்திறனாளிகளை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார். இந்த நியமனத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் காலஅவகாசம் 31.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்டப்பூர்வ அடிப்படை, தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 (9/1999) மற்றும் தமிழ்நாடு சட்டம் 30/2025 மூலம் செய்யப்பட்ட பிரிவு 37(1)(i-a) திருத்தத்தின் அடிப்படையிலாக அமைகிறது. முன்னதாக, 01.07.2025 முதல் 17.07.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்த நிலையில், தகுதியான மாற்றுத்திறனாளிகள் இன்னும் அதிகமாக வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காக காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பப் படிவங்களை கீழ்காணும் இணையதள முகவரிகளில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்:


தகுதியான மாற்றுத்திறனாளிகள் தங்களின் பூர்த்தியான விண்ணப்பங்களை தங்களுக்குச் சொந்தமான நகராட்சி ஆணையாளர் அல்லது பேரூராட்சி செயல் அலுவலரிடம், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 31.07.2025 அன்று மாலை 3.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884