மொரப்பூர், ஜூலை 25 | ஆடி 09 -
மொரப்பூர் ஒன்றியம், கோபிநாதம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஒடசல்பட்டி சமுதாய கூடத்தில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முகாமினை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். முகாமில் பொதுமக்கள் திரண்டி, கல்வி உதவித் தொகை, வயோதிபர் ஓய்வூதியம், வீட்டு வசதி திட்டம், குடும்ப அட்டை மாற்றம், வேலைவாய்ப்பு சான்றிதழ்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட சேவைகளுக்காக கோரிக்கைகள் வைத்தனர்.
முகாமில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தகுதியான பயனாளிகளுக்கு சான்றிதழ்கள், நலத்திட்ட அட்டைகள், ஒதுக்கீட்டு ஆணைகள் ஆகியவற்றை நேரில் வழங்கியது. மேலும், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறையின் சார்பில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இலவச பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்ட இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.
மாநிலத்தளத்தில் நடைபெறும் 10,000 முகாம்களில் ஒரு பகுதியாக இந்த முகாமும், மக்கள் குறைகளை நேரில் கேட்டு தீர்வை அளிக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
.gif)

.jpg)