ஒடசல்பட்டி, ஜூலை 25 | ஆடி 09 -
தருமபுரி மாவட்டம், தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட மூக்கனூர் ஊராட்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின் பேரில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முகாமின் போது மக்களுடன் நேரடியாக உரையாடி, அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.
முகாமில் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளின் மனுக்களின் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணைகள், இ-பட்டா ஆணைகள், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள் போன்றவை வழங்கப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளிகள், வயோதிபர்கள் உள்ளிட்டோர் மனுக்களை எளிதில் அளிக்குமாறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டிருந்தன. இத்திட்டத்தின் கீழ் அரசின் பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் ஒரே நாளில் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டன.
முகாமில் வருவாய், சமூக நலன், மக்கள்நல்வாழ்வு, குடும்ப நலன், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகள் இணைந்து பணியாற்றின. பொதுமக்கள் இந்த முகாமில் ஆர்வமுடன் கலந்துகொண்டு, தங்களது தேவைகளைப் பதிவு செய்தனர்.
.gif)

.jpg)