Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மாரண்டஅள்ளி அருகே ஸ்ரீ வரசித்தி விநாயகர், நவகிரக ஆலயக் கும்பாபிஷேகம் பக்தி பூர்வமாக நடைபெற்றது.


மாரண்டஅள்ளி, ஜூன் 9:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள நடு குட்லானஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ நவகிரக ஆலயத்தின் ஜீர்ணோதாரண நூதன கோபுர கும்பாபிஷேக விழா கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களாக பக்தி பூர்வமாக நடைபெற்றது.

விழா நிகழ்வுகள் மங்கள வாத்தியங்களுடன் அதிகாலை கங்கை பூஜை, கணபதி ஹோமம், கலச ஸ்தாபனம், கங்கணதாரணம், புண்ணியஹவாசனம், தேவசாந்தி, வேத பாராயணம், மகாதீப ஆராதனை, வாஸ்து சாந்தி, பிம்ப சுத்தி போன்ற புனித ஆன்மீக கிரியைகளுடன் தொடங்கியது. மாலை பால்குடம் எடுத்தல், அஷ்டபந்தனம் சாத்துதல் ஆகியன நடைபெற்றன.


விழாவின் முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் துவாதசி திதி, சுவாதி நட்சத்திரம், கடக லக்னத்தில் சிறப்பாக நடைபெற்றது. கோபுரக் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அந்த நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார பூஜை, மகா மங்கள ஆரத்தி, சர்வ தரிசனம், தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவினை காண நடுகுட்லானஅள்ளி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் மிகுந்த பக்தியோடு கலந்து கொண்ட இந்த விழா கிராமத்துக்கு ஆன்மிக பரவசத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884