தருமபுரி, ஆடவை (ஆனி) 09-
தருமபுரி மாவட்ட வருவாய் அலகில், மாவட்ட ஆட்சித்தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் பயன்பாட்டில் இருந்து வந்த TN-07 G 1202 எனும் எண்ணைக் கொண்ட வாகனம் தற்போது கழிவு வாகனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இக்கழிவு வாகனம் ரூ.14,100/- (ரூபாய் பதிநான்காயிரத்து நூறு) ஆகியதை ஆரம்ப ஏலத் தொகையாக கொண்டு ஏலத்திற்கு விடப்பட உள்ளது.
இந்த ஏலம் (27.06.2025) ஆடவை (ஆனி) 09 அன்று, காலை 11.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் குறித்த நேரத்தில் வருகை புரிந்து, ஏலத்தில் பங்கேற்று விலைப்புள்ளி கூறலாம். இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.