பென்னாகரம், ஆடவை (ஆனி) 10-
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்து, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன் தலைமை வகித்தார். மத்திய குழு உறுப்பினர் குணசேகரன் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார, கிளை நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டு கண்டன உரைகள் நிகழ்த்தினர். தாக்குதலுக்கு நீதிகேட்டு வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், ஜனநாயக உரிமைகளை மீறும் தாக்குதல்களை அரசாங்கம் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.