தருமபுரி, ஆடவை (ஆனி) 11-
தருமபுரி மாவட்டத்தில் 3,45,500 பசு மற்றும் எருமை இனங்கள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 7-வது சுற்றாக கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக மத்திய அரசால் மொத்தம் 3,62,950 கோமாரி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி முகாம்கள் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் 02.07.2025 முதல் 22.07.2025 வரை மூன்று வாரங்களுக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முகாம்களில், 4 மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட பசு, எருமை இனங்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும். முகாம்களில் தவறவிடப்படும் கால்நடைகளுக்கு, 23.07.2025 முதல் 31.07.2025 வரை மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 100 சதவீதம் தங்களுடைய கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளைநிலையம் அல்லது கால்நடை மருத்துவமனையை அணுகலாம். தொடர்பு எண்கள்: