பாலக்கோடு, ஆடவை (ஆனி) 11-
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு காவல் நிலையம் அருகில், சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்பட்டு வரும் சட்ட தூண்கள் அறக்கட்டளை அலுவலகம் திறப்பு விழா, மாவட்ட தலைவர் பி.கே.சிவா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். சட்ட தூண்கள் அமைப்பின் மாநில தலைவர் மற்றும் அறக்கட்டளை நிறுவனர் குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த அமைப்பு, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நீதி வழங்கும் வகையிலும், சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இலவச சேவைகள் வழங்கி வருகின்றது. புதிய அலுவலகம், இந்த சேவைகளை மேலும் விரிவாக வழங்கும் என தெரிகிறது.
இத்திறப்பு விழாவில் பொருளாளர் காவேரி, துணைத் தலைவர் முனியப்பன், அறங்காவலர் அருள் முருகன், வணிகர் சங்க தலைவர் முத்து, பாஜக நகர தலைவர் கணேசன், நகர செயலாளர் ராஜாராம், மீனவர் அணி மாவட்ட தலைவர் மாதையன், அரிமா சங்க தலைவர் கேசவராஜ், பொருளாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.