ஊரக இளைஞர்களுக்கான இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சி – RSETI வழியாக வாய்ப்பு! - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 ஜூன், 2025

ஊரக இளைஞர்களுக்கான இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சி – RSETI வழியாக வாய்ப்பு!


தருமபுரி, ஜூன் 17-

இளைஞர்கள் தொழில்முனைவோராக உருவாக ஊக்கமளிக்கும் வகையில், கிராமப்புற இளைஞர்களுக்கான “ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள்” (RSETIs) தமிழ்நாடு முழுவதும், சென்னை தவிர 37 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும், இந்தியன் வங்கி போன்ற முன்னோடி வங்கிகள் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் மாநில ஊரக வளர்ச்சித் துறையின் ஒத்துழைப்புடன் இந்த மையங்களை இயக்கி வருகின்றன.


தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இந்த மையங்கள் உறையிட வசதியுடன் கூடிய பயிற்சிகளை வழங்குகின்றன. மொத்தமாக 64 வகையான தொழிற்பயிற்சிகள் — செல்போன் சரிசெய்தல், ஓட்டுநர் உரிமம் பயிற்சி, பிளம்பிங், தச்சு, இருசக்கர வாகன சரிசெய்தல், ஒயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் உள்ளிட்டவை — இலவசமாக வழங்கப்படுகின்றன.


பயிற்சியில் சேர தகுதி:

  • வயது: 18 முதல் 45 வரை

  • கல்வி: குறைந்தது 8ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ITI, டிப்ளமோ, பட்டதாரிகள் அனைவருக்கும் ஏற்ற பயிற்சிகள் உண்டு.

  • பயிற்சி காலம்: 10 முதல் 45 நாட்கள் வரை

  • பயிற்சிக்காலத்தில் மதிய உணவு, சிற்றுண்டி, தேநீர், பாடபுத்தகங்கள், சீருடை, தொழில் கருவிகள் வழங்கப்படும்.


பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். தொழில்முனைவர் திறன் வளர்ப்பு பயிற்சிகள், சந்தை ஆய்வு பயணம், தொழிற்சாலை பார்வை, வெற்றிகாணும் தொழில்முனைவோருடன் நேரடி கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்படுகிறது. பயிற்சியாளர்களை தொடர்ந்து 2 ஆண்டுகள் கண்காணித்து, கடன் உதவியும் வங்கி வழியாக ஏற்பாடு செய்யப்படுகிறது.


தொடர்பு கொள்ள:

  • RSETI – இந்தியன் வங்கி பயிற்சி மையம், தருமபுரி
    📞 04342-230511 / 234464

  • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், தருமபுரி
    📞 04342-233298

  • தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன வாழ்வாதார அழைப்பு எண்: 155330

  • RSETI Toll-Free: 1800 309 8039


இது போன்ற பயிற்சிகளை பயன்படுத்தி இளைஞர்கள் தொழிலில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad