தருமபுரி, ஜூன் 11-
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சென்னை கலைவாணர் அரங்கில் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், மாநில அளவிலான மணிமேகலை விருதுகள் மற்றும் வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினர்.
இதையடுத்து, தருமபுரி மாவட்டம் அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் மாவட்ட அளவிலான 10 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.172.04 இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பு வங்கி கடன் உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.06.2025) வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும், இந்த சிறப்பு உதவிகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் தருமபுரி நகராட்சி, தருமபுரி ஊராட்சி ஒன்றியம், கடத்தூர், நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி. வெங்கடேஷ்வரன், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் திருமதி அ.லலிதா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி எஸ்.மலர்விழி, தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி மா. லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (இந்தியன் வங்கி) திரு. ராமஜெயம், அரூர் பேரூராட்சி தலைவர் திருமதி இந்திராணி தனபால், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் திரு. கி.வீரமணி, உதவி மகளிர் திட்ட அலுவலர் திருமதி சந்தோஷம் மற்றும் பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்கள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த வாயிலாக, பெண்கள் தங்களது சிறந்த வாழ்க்கை நிலையை உருவாக்க, தொழில் முனைவோராக முன்னேற, அரசு வழங்கும் வங்கிக் கடன் உதவிகள் முக்கிய பங்காற்றும் என்பதை இந்த நிகழ்வு மிக தெளிவாக உணர்த்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக