பாலக்கோடு, ஆடவை (ஆனி) 05-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஒரு காதல் ஜோடி இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி திருமணமாக முடிந்தது. மாரண்டஅள்ளி அருகே சீரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி அருள்குமார் (23) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே அரசம்பட்டியைச் சேர்ந்த டிப்ளமோ அக்ரிகல்சர் பட்டதாரி சந்தித்தா (22) கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமானனர். நட்பு காதலாக வளர, பெற்றோர் எதிர்ப்பை மீறி ஓசூரில் உள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணம் செய்ததற்குப் பிறகு, பெற்றோரிடம் பயந்த இந்த ஜோடி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் புகுந்தது. தகவல் அறிந்த இருவரின் பெற்றோர்களும் காவல் நிலையம் வந்தனர். இதில் பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சந்தித்தா தனது விருப்பத்தின்படி காதலனுடன் வாழ விருப்பம் தெரிவித்ததால், போலீசார் இருவரையும் அனுமதித்து அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்வு பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களின் தாக்கம் இளைய தலைமுறையில் காதலும் திருமணமும் எளிதாக நிகழ முடிகிறது என்பதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டு இது என பலரும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக