அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 மே, 2025

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு.


பாலக்கோடு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, நேரடி இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கான விண்ணப்பங்களை http://www.tnpoly.in என்ற இணையதளத்தின் மூலம் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கீழ்காணும் தகுதிகள் உள்ளது:

  1. நேரடி இரண்டாம் ஆண்டு: பன்னிரண்டாம் வகுப்பு (பூரணமாக) அல்லது ITI இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  2. முதலாமாண்டு: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 11ஆம் வகுப்பை நிறுத்தியவர்கள் அல்லது 12ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


இந்த வாய்ப்பை அனைத்து மாணவர்களும் பயன்படுத்தி, அதற்கான விண்ணப்பத்தை விரைந்து சமர்ப்பிக்குமாறு கல்லூரி முதல்வர் முனைவர் பெ. செல்வராணி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad