Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தலைமைவில் ஆய்வுக்கூட்டம்.


தருமபுரி, மே 26-

தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் 26 மே 2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் பேசி, போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழக முதல்வரின் கடுமையான உத்தரவுப்படி, கள்ளச்சாராயம் தயாரிப்பு, விற்பனை, பதுக்கல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவசியம் ஏற்பட்டால் குண்டர் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.


மேலும், இளம் தலைமுறையை இந்த பாதகமான பாதையில் இருந்து பாதுகாக்க, பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல்துறையுடன் இணைந்து திட்டமிட்டு நடத்தியே ஆக வேண்டும். "DRUG FREE TN" என்ற மொபைல் செயலியை மாணவர்களிடம் அறிமுகப்படுத்தி, சுயவிபரங்கள் கோராமல் புகார் அளிக்கும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.


மேலும், 24/7 மணி நேரமும் செயல்படும் வாட்ஸ்அப் எண் 63690 28922-இல் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும், தருமபுரி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார கடைகளில் நேரடி கண்காணிப்பு நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார். காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் உறுதி செய்தார்.


இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், இணை இயக்குநர் (மருத்துவம்) மருத்துவர் சாந்தி, உதவி ஆணையர் திருமதி நர்மதா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தேவையான ஆலோசனைகளையும், திட்டங்களையும் முன்வைத்தனர். இவ்வாறு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் உறுதியுடன் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884